திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடக்கம்

திருப்பதி பிரம்மோற்சவத்தின் முதல்நாளான நேற்று பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் போது, ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பட்டு வஸ்திரங்களை, தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமர்பித்தார்.

Exit mobile version