கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றம் பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் அவரது சகோதரர் மகபூப் பாஷா ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன், பேரில் காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version