பொது இடத்தில் மது அருந்தியதை கண்டித்ததால் காவலர் மீது தாக்குதல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர காவல் நிலையத்தின் தலைமைக் காவலரை தாக்கிய சம்பவத்தில் திமுக பிரமுகருக்கு நெருக்கமானவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சிவகுமார் நேற்று இரவு ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு தங்கும் விடுதியின் அருகே ஐந்து பேர் மது அருந்தியதை பார்த்து காவலர் சிவகுமார் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த திமுக பிரமுகருக்கு நெருக்கமான ஜெகநாதன் என்பவர் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து தலைமை காவலர் சிவக்குமாரை தாக்கியுள்ளார். இதனையடுத்து, தலைமை காவலர் சிவக்குமார் இடம் புகார் மனு பெறப்பட்டு, சிவக்குமாரை தாக்கிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version