வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் ஆர்.எஸ். பாரதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி, பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 14 ஆம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற வாசகர் வட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். எஸ். பாரதி, நீதித்துறை குறித்தும், பட்டியல் இன மக்களை அவமதிக்கும் விதமாக அவதூறாகவும் பேசியுள்ளார்.

இது குறித்து பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் அலுவலக செயலாளரும், வழக்கறிஞருமான பாரதிதாசன் புகார் அளித்துள்ளார். ஆர்.எஸ். பாரதி மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

Exit mobile version