முதலமைச்சர் முன்னிலையில் அமமுகவை சேர்ந்த 2000 பேர் அதிமுகவில் இணைந்தனர்

அமமுகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமமுகவைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை அவர் வாழ்த்தி வரவேற்றார். அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Exit mobile version