அரியலூர் மாவட்டம் செந்துறையில் பொது இடங்களில் அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள கொடிகம்பங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் வருவாய்த்துறை அலுவலர் ராமலிங்கம் தலைமையில் பொது இடங்களில் அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள கொடிகம்பங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் முழுவதுமாக அகற்றப்பட்டது.