ராதாபுரத்தில் உள்ள பூங்காவில், நீக்கப்பட்ட "அம்மா" பெயர் மீண்டும் எழுதப்பட்டது

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள பூங்காவில், நீக்கப்பட்ட “அம்மா” பெயர் மீண்டும் எழுதப்பட்டது.

ராதாபுரத்தில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அம்மா பூங்கா அமைக்கப்பட்டது.

பணிகள் அனைத்து முடிந்து திறக்கப்பட்ட பூங்காவில் “அம்மா” என்ற பெயர் நீக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து, பூங்காவில் நீக்கப்பட்ட “அம்மா” பெயர் மீண்டும் எழுதப்பட்டது.

இனி வரும் காலங்களில், அதிமுக அரசின் கல்வெட்டுகள் அகற்றப்பட்டாலோ, அம்மா என்ற பெயர் நீக்கப்பட்டாலோ, சட்டப் போரட்டம் நடத்தி அதனை மீட்க முடியும் என்பதற்கு இந்த ராதாபுரம் பூங்கா சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Exit mobile version