பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு – காஷ்மீரில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் எல்லை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள டெக்வார் என்ற பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலால் காஷ்மீர் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், காஷ்மீர் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Exit mobile version