தமிழகத்தில் அடுத்த 42 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் உள் மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 42 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளநிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 2ல் இருந்து 3 டிகிரி அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், இன்னும் சில நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளையொட்டிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version