நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரின் புகைப்படங்களை வெளியீடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 2 மாணவிகள் உட்பட 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டனர். தமிழக மாணவர்களுக்கு பதிலாக மோசடியாக அவர்கள் தேர்வு எழுதியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. புகைப்படங்களில் உள்ள நபர்களின் பெயர், முகவரி தெரிந்தால் 94438 84395 என்ற எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version