கிராம சபை கூட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தி.மு.க. வினர் இடையூறு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், கிராம சபை கூட்டம் என்ற பெயரில், வழிநெடுக்கிலும் பேனர்கள், கொடிகளை கட்டி திமுகவினர் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

அரவக்குறிச்சி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கிராம சபை கூட்டம் என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்காக, அடாவடி செயல்பாடுகளில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக மக்கள் புலம்புகின்றனர். ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், புதிதாக கல்வெட்டு திறப்பது, சாலை நெடுக்கிலும் பேனர்கள், கொடிகள் வைப்பது போன்ற வெற்று விளம்பரங்களில் ஏன் ஈடுபடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். திமுகவினர் செய்யும் இடையூறுகளால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version