மாதவரம் பகுதியில் இன்றும் 35 மூட்டை பணக்குவியல் கண்டெடுப்பு

மாதவரம் பகுதியில் இன்றும் 35 மூட்டை பணக்குவியல் கண்டெடுப்பு!

நேற்று காலை மாதாவரம் ஆட்டு சந்தை அருகே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக கிழிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட மூட்டைகள் கண்டெடுத்தனர்.அதேபோல இன்று மாலை 3.10 மணியளவில் மாதாவரம் ரவுண்டானா அருகே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கிடக்கின்றன என மாதாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுமார் 30 க்கும் மேற்பட்ட பணமூட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.நேற்றிம் இன்றும் தொடர்ச்சியாக பழைய ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக்கி மூட்டைகளில் கண்டுக்கப்பட்டது மாதவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Exit mobile version