ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகளுக்கு 2 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது

வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஏழைகளாக கருதப்படுபவர்கள் யார் என்ற விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version