மனைவியின் தலையில் மண்வெட்டியால் அடித்து கொலை செய்த கணவர்

சேந்தமங்கலம் அருகே குடும்ப தகராறில் மண்வெட்டியால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த நடுகோம்பை பகுதியை சேர்ந்தவர் மோகன் என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகனும் மகளும் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கௌசல்யாவிடம் மோகன் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாத்தால் ஆத்திரமடைந்த மோகன் மண்வெட்டியால் கௌசல்யாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கௌசல்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் மோகன் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கௌசல்யாவின் சடலத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version