குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் புதிய பட்டியல் வெளியீடு

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தேர்வானவர்களின் பெயர், பட்டியலில் முதல் 39 இடங்களை பிடித்தவர்கள் இந்த இரண்டு மையங்களில் தேர்வெழுதியவர்கள் என்று உறுதிப்படுத்தப் பட்டதை அவர்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். இது தொடர்பான வழக்கை, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதிலாக, புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை, தேர்வானவர்கள் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version