ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு !

பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக, பல்வேறு கட்சியினர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆதிதமிழர் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தலித் சேனா, தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம், அருந்ததியர் விடுதலை முன்னணி, புரட்சி கழகம் இயக்கம், அருந்ததியர் மக்கள் பேரவை, தேசிய விடுதலை வேங்கைகள் கட்சி, ஆதித்தமிழர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கான கடிதத்தையும் கழக இடைக்கால பொதுச் செயலாளரிடம் வழங்கினர்.

Exit mobile version