திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் வன்முறைகள் அரங்கேறின -அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், வன்முறை அரங்கேறியதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை சாந்தோமில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக் கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கினார். விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சியில், உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதாகவும், தற்போது, அமைதியாகவும், நேர்மையாகவும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டாலின் கடைசி வரை திமுக தலைவராக மட்டுமே இருக்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Exit mobile version