குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை

தொடர் மழையால் குற்றாலம் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த நிலையில், குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு வரும் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

Exit mobile version