அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அறிவித்துள்ளது.

அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வதை முடிவு செய்வதற்காக அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் கூட்டம் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. ஜாமியாத் உலேமா ஹிந்த் தலைவர் அர்சாத் மதானி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகிகள், அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாகத் தெரிவித்தனர். ஒரு மசூதிக்கு மாற்றாக மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலத்தையோ பணத்தையோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version