நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு என்ற துரோகத்துக்கு விதை விதைத்ததே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் என்று சாடியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். அவருக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை திமுக செய்து வருவதாக விமர்சித்தார். இதையடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவையில் அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லியதை போல், நீட் தேர்வு விஷயத்தில் திமுக, தும்பை விட்டு வாலை பிடிப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக அரசு உறுதியுடன் இருப்பதாக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீர் தேர்வு என்ற துரோகத்துக்கு விதை விதைத்ததே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் என்று சாடினார்.

Exit mobile version