அதிமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த எதிர்கட்சிகள் திட்டம்: அமைச்சர் தங்கமணி

அதிமுக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆயிரத்து 127 பயனாளிகளுக்கு 1 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, அதிமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றிப் பெறும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version