தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு 17 பேர் உயிரிழந்த பரிதாபம்

தாய்லாந்தில், ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஜக்ராபாந்த் தோமா என்ற ராணுவ வீரர், அங்குள்ள ராணுவ முகாமில் இருந்து, துப்பாக்கியை திருடி, ராணுவத்தளபதி உள்ளிட்ட 3 பேரை சுட்டு கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து, ராணுவ வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், நகோன் ராட்சசீமா மாகாணத்திற்கு சென்று, அங்குள்ள வணிக வளாகத்தினுள் நுழைந்து, பொதுமக்கள் மீது பயங்கரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். ஃபேஸ்புக்கில் இதனை நேரடி ஒளிபரப்பு செய்தவாறு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version