தெலுங்கானாவில் மணமக்கள் மாஸ்க் மாலை மாற்றி திருமணம்

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா கால சூழ்நிலையை அடையாளப்படுத்தும் விதமாக மணமக்கள் மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளனர். நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த ரவிகாந்த், சர்ஜனா ஆகியோரது திருமணம் பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது நண்பர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் கால சூழ்நிலையை தெளிவுபடுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முக கவசங்களால் தயார் செய்யப்பட்ட மாலைகளை இரண்டு பேரும் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

Exit mobile version