தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகத்தின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை காவல் தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை மயிலாப்பூர் காவல்துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை சிபிசிஐடியின் இணைய குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பியாக ஜெயலட்சுமியையும், மத்திய மண்டல ஐ.ஜியாக அமல்ராஜ் என்பவரையும், திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக வரதராஜூ என்பவரையும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version