தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

வெப்பம் வாட்டி வரும் நிலையில், தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய உள்ளதாகவும், சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப வாட்டும் எனவும், சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உடுமலைப்பேட்டையில் 3.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Exit mobile version