தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு

சட்டமன்ற உறுப்பினராக உள்ள வசந்தகுமார், தற்போது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 351 க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக உள்ள வசந்த குமார், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, கன்னியாகுமரியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மக்களவை உறுப்பினராகியுள்ள நிலையில், தனது தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார். இதனால் தமிழகத்தில் நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். எனவே, தமிழகத்தில் மீண்டும் ஒரு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version