தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம் : 3 பேர் கைது

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் செயல்பட்டு வந்த 3 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

உளவுத்துறையினரின் தகவலின்படி தேசிய விசாரணை முகமையும் அவ்வபோது சோதனை நடத்தி சந்தேகப்படும் நபர்களை கைது செய்து வருகிறது. இந்தநிலையில் டெல்லியில் சந்தேகப்படும் வகையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்தததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த டெல்லி காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version