சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்தநிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு பூஜை கடந்த 17-ம் தேதி துவங்கியுள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு அதாவது வரும் 26-ம் தேதி வரை நீட்டித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 4 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Exit mobile version