மறு தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு : அமைச்சர் செங்கோட்டையன்

2013,14 மற்றும் 17 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய அரங்கம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version