ராமநாதபுரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான அரிய வகை கடல் அட்டைகளும், திமுக பிரமுகரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற, 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் அட்டைகளை, கடற்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் திமுக பிரமுகருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Exit mobile version