விடியா ஆட்சியில் பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் அரண்மனை முன்பு, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன் தலைமையில், தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகர் தலைவர் மாரியப்பன் முன்னிலையில், நியாயவிலை கடையில் பனைவெல்லம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றவும், பனைமரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version