ராஜபாளையத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. ராஜபாளையம் முடங்கியார் சாலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து 450 வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டிருந்தன. உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவகாசம் முடிந்த நிலையில், காவலர்கள் உதவியுடன், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வணிக வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டன. மாற்று இடம் வழங்கிய பின்னர், குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட இருக்கின்றனர்.

Exit mobile version