புதுக்கோட்டையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் பரவிய ஆடியோவில், ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் காவல்துறையினரின் வாகனங்கள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டன.இதனால் பதற்றமான சூழல் உருவானது. பதற்றமான சூழல் நிலவுவதால், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version