பொள்ளாச்சியில் காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல்

பொள்ளாச்சியில் காரில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி உடுமலை சாலையில், காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது காரில் துணியால் மூடப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளில், தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 18 அட்டைப் பெட்டிகளில் இருந்த 300 கிலோ பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்தவரை கைது செய்தனர். அவைகள் பொள்ளாச்சி கணபதி பகுதியில் உள்ள குடோனில் இருந்து கடத்தி வரப்பட்டு, காந்தி மார்க்கெட் கடைகளில் விற்பனை செய்ய கொண்டு வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version