பாலருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை

கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆரியங்காவுவில் உள்ள பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கேரள மாநில ஆரியங்காவுவில் உள்ள பாலருவியில் நேற்று முன்தினம் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Exit mobile version