சிறு குற்ற வழக்குகளில், கைது நடவடிக்கையை தவிர்க்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை உள்ளிட்ட சிறு குற்ற வழக்குகளில், கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை முன்ஜாமின் தொடர்பான வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் தொடர்பான மனுக்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி, இதை கட்டுக்குள் கொண்டு வர, சிறு குற்ற வழக்குகள், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார். குற்றவாளி நேரில் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இது குறித்து காவல்துறைக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதி, சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை உள்ளிட்ட சிறு குற்ற வழக்குகளில் கைது நடவடிக்கையை காவல்துறை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Exit mobile version