மாங்குடி கிராமத்தில், பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் கைது

அறந்தாங்கி அருகே, 6 வயது சிறுமியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி, பாலியல் தொந்தரவு செய்தவரை, காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், தனம் தம்பதியினர்.
கூலி வேலை செய்துவரும் இவர்களுக்கு, 6 வது பெண் குழந்தையொன்று உள்ளது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கருப்பையா என்பவர் சிறுமியை தனது வீட்டிற்க்கு அழைத்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதே போன்று மூன்று முறை பாலியல் தொந்தரவு செய்த கருப்பையா வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

கருப்பையாவின் மிரட்டலுக்கு பயந்து, வெளியில் சொல்லாமல் இருந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது.

இதனைக் கண்ட பெற்றோர்கள், சிறுமியை அழைத்து விசாரித்ததில், பக்கத்து வீட்டு கருப்பையா தன்னிடம் நடந்துகொண்டதைப் பற்றி கூறியுள்ளார்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், கருப்பையா மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினரால், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கருப்பையா சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version