கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேர் கைது

சபரிமலைக்கு 2 இளம்பெண்கள் பெண்கள் சென்ற விவகாரத்தில், கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபரிமலைக்கு சென்ற 2 இளம்பெண்கள், அங்கு ஐயப்பனை தரிசனம் செய்தனர். இது, பாஜக மற்றும் இந்து அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கேரளாவில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், மூணாறில், வியாபாரிகள் மற்றும் வியாபார சங்கங்கள், கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜகவைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version