கேரளாவில் பருவமழை தீவிரம் : மூணாறில் மழையின் சராசரி அளவை விட மழை குறைவு என தகவல்

கேரளாவில் பருவமழை துவங்கிய நிலையில் இடுக்கி மாவட்டம் மூணாறில் மழையின் அளவு குறைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் பருவ மழை துவங்கியுள்ளது. மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. விவசாய பகுதியான இடுக்கி மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரி அளவை விட மழை குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 54 சதவீதம் அளவுக்கு மழை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தநிலையில், மூணாறுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Exit mobile version