கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தம்

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் குறைந்ததால், ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 450 கனஅடியில் இருந்து 400 கனஅடியாக குறைந்துள்ளது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவிக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, மெயினருவியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், தொடர்ந்து 182-வது நாளாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version