இத்தாலியில் கொரோனா வைரஸிற்கு 34 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் கொரோனா வைரஸிற்கு இதுவரை 34 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸால் இதுவரை ஆயிரத்து 577 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸால் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று மட்டும் 528 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இதுவரை 83 பேர் குணமுடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில், இந்திய மாணவர்கள் 85 பேர் சிக்கியுள்ளனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள பவி நகர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version