இந்தோனேஷியாவில் ஒரு மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம்

இந்தோனிசியாவில் இன்று மட்டும் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தோனிசியா நாட்டில், ஜாவா என்ற தீவில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்பு, பாலி என்ற தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கு 6.1 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், அங்குள்ள சில பகுதிகளிளும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதமும், உயிர்சேதமோ ஏற்படவில்லை என்கிற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

Exit mobile version