இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அளவிலான கராத்தே போட்டி

சென்னை சாந்தோம் தனியார் பள்ளியில் தொடங்கியுள்ள கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியை அர்ஜுனா விருது பெற்ற ஆணழகன் பாஸ்கரன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாகக் கராத்தே போட்டி இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவில் இருந்து அதிக அளவிலான வீரர்களை ஒலிம்பிக் கராத்தே போட்டியில் பங்கேற்கச் செய்ய ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவதாக பாஸ்கரன் தெரிவித்தார்.

Exit mobile version