ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த, பெண்ணுக்கு கொரோனா வைரஸ்!

ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த, பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்ற சந்தேகத்தின்பேரில், மருத்துவப்பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணிப்படுகின்றனர். இந்தநிலையில், சிட்டாள் என்ற பெண், ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக சென்னை வந்தார். அவருக்கு உடல்நாலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Exit mobile version