ஒகேனக்கல்லில் நீர் வரத்து குறைந்தது

ஒகேனக்கல்லில், தொடர்ந்து இரண்டாவது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 600 கன அடியாக உள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழையின் தாக்கம் குறைந்திருப்பதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கலுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக, நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 600 கன அடியாக உள்ளது. நீர்வரத்து குறைந்தபோதும், அருவியில் அமைக்கப்பட்ட தடுப்புவேலிகள் சேதமடைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொடர்ந்து 141வது நாளாக அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Exit mobile version