பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் நொண்டிகோவில்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது விடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பாரம்பரிய மஞ்சுவிரட்டு போட்டி விமர்சையாக நடைபெற்றது. அங்குள்ள தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் கூட்டங்களுக்கு இடையில் சீறிப்பாய்ந்தன. இதனை அங்கு கூடியிருந்த வீரர்கள் அடக்க முயன்றனர். போட்டியில் 70-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், காளைகளை அடக்க முயன்ற வீரர்களில் 2 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

Exit mobile version