காஷ்மீரில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

தர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீரில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் கர்தார்பூர் வழித்தடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பஞ்சாபின் குருதாஸ்பூர் தேரா பாபா நானக்கில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்துவாராவுக்குச் செல்வதற்குப் புதிதாக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தையும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். முதற்கட்டமாகக் கர்தார்பூருக்குச் சென்ற சீக்கியப் புனிதப் பயணிகளை அவர் வழியனுப்பி வைத்தார்.

Exit mobile version