மீன்வளத்துறையில் வெளியான புதிய அறிவிப்புகளுக்கு ஒப்புதல்

சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பல்வேறு அறிவிப்புகளுக்கு, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மீன்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின் போது, அமராவதி மற்றும் திருமூர்த்தி நீர்த்தேக்கங்களில் நவீன மீன் இறங்குதளம் அமைக்கப்படும், சென்னையில் பல்வேறு மீன் இனங்களை ஒருங்கிணைத்து மீன் திருவிழா நடத்துவது போன்ற பல அறிவிப்புளை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார். இவ்வாறு வெளியான அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version