குடும்பத் தகராறில் தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

புதுச்சேரியில் குடும்ப தகராறு காரணமாக தாயை கொன்றுவிட்டு 4 நாட்கள் தாயின் சடலத்துடன் தங்கி இருந்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் ஜெயமேரி என்பவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த ஜெயமேரியின் உடலை கைப்பற்ரி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஜெயமேரியின் மகன் அமலோற்பவநாதன் மீது சந்தேகம் எழுந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது தனது தாயின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கண்டித்ததாகவும் அப்போது ஏற்பட்ட சண்டையில் தாயை கத்தியால் குத்தி கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது தாயின் சடலத்தை ஒரு அறையில் வைத்துவிட்டு அதே வீட்டில் 4 நாட்களாக இருந்ததாகவும் அமலோற்பவ நாதன் விசாரணையில் கூரியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version