இங்கிலாந்தில் நடைபெற்ற பாராஜூடோ போட்டியில் தங்கம் வென்ற சுபாஷினி

இங்கிலாந்தில் நடைபெற்ற பாரா ஜூடோ போட்டியில், சேலம் மாணவி தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சியைச் சேர்ந்த பழனிசாமி – அம்மாசி தம்பதியினரின் மகள் சுபாஷினி, தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பார்வைக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியான சுபாஷினி, இங்கிலாந்தில் நடைபெற்ற பாரா ஜூடோ போட்டியில் 44 கிலோ எடைபிரிவில் கலந்துகொண்டு, 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்க, தமிழக முதலமைச்சர் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாணவிக்கு வழங்கினார். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்களான மனோகரன் தங்கப் பதக்கமும், முத்துலட்சுமி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். கடுமையான பயிற்சி மற்றும் முதலமைச்சரின் உதவி ஆகியவைதான், தங்கப்பதக்கம் வெல்வதற்குக் காரணம் என்று சுபாஷினி தெரிவித்துள்ளார். மாணவி சுபாஷினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Exit mobile version